Skip to content

Superstar’s Meeting with his fan – A heart touching account

March 25, 2015

தலைவரின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் !!!
தலைவர் ரஜினியை மட்டுமே நினைவில் கொண்டுவாழும் வியாசர்பாடி ரஜினிபாலா:
தலைவர்ரஜினியை இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது அவரது வெறித்தனமான ரசிகர் ரஜினி பாலாவுக்கு.
சென்னை வியாசர் பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த இளை ஞர் ரஜினிபாலா. ரஜினி யின் ரசிகர் மட்டுமல்ல, வெறியன் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ரஜினி யைப் பார்க்கலாம் வா என யார் கூப்பிட் டாலும் அவர்களுடன் கிளம்பிவிடுவார். வீட்டில் சதா நேரமும் ரஜினி படம் பார்ப்பது, ரஜினியைப் போல் நடை, உடை, பாவனை, பேச்சு, இப்படி ரஜினியே மூச்சென இருக்கும் ரஜினி பாலா வுக்கு வயது 36. ஆனால் செயல்பாடுகள் எல் லாமே ஒரு குழந்தை யைப் போல்தான். –
சரியாக 10.28-க்கு இண்டர்காம் லைனில் வந்து “”அந்தப் பையன் வந்துட் டாரா?’’என உதவியாளர் சுப்பையாவிடம் விசாரிக்கிறார் தலைவர்ரஜினி. “”இல்ல சார், நக்கீரன்ல யிருந்து வந்துட்டாங்க. அந்தப் பையன் அண்ணா மேம்பாலத் துக்கிட்ட வந்துக்கிட்டிருக்கான்னு தகவல் சார்’’என்கிறார். மீண்டும் 10.40-க்கு ரஜினி விசாரிப்பதற்கும் ரஜினிபாலா குடும்பம் வரு வதற்கும் சரியாக இருந்தது.
“”தம்பி உனக்காக சார் காத்துக்கிட்டிருக்காரு”’என்று சொல்லியபடி, ரஜினிபாலாவுக்கும் அவரது தாயாருக்கும் மோர் கொடுத்து உபசரிக்கிறார் சுப்பையா. சில நிமிடங்கள் கரைகிறது… கதவைத் திறந்து கொண்டு மின்னலென அந்த ஹாலுக்குள் பிரவேசிக்கிறார் ரஜினி.
“”கண்ணா எப்படி இருக்க?”’என கேட்ட படியே ரஜினிபாலாவை கட்டி அணைக்கிறார் ரஜினி.
தலைவா…’’எனக் கூறியபடி சடாரென ரஜினியின் காலில் விழுகிறார் ரஜினிபாலா. மகிழ்ச்சியில் அதிர்ச்சியாகி நின்ற ரஜினி பாலாவின் தாய் பானுமதிக்கு இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.
ரஜினிபாலாவை தூக்கி நிறுத்திய ரஜினி, “”உட்காரு கண்ணா…’’என்றவாறு தன் அருகில் உட்கார வைக்கிறார். “””வெளியில நிக்கிறவங்களை உள்ள வரச்சொல்லுங்க”’’ என ரஜினி சொல்லியதும், ரஜினிபாலாவின் தங்கை மற்றும் உறவினர்கள் உள்ளே அழைத்து வரப்படுகிறார்கள்.
“”தம்பிக்கு வயசு என்ன, ஏன் இப்படி ஆயிட்டான்”’என அக்கறையாக ரஜினிபாலாவின் தாயாரிடம் விசாரித்துவிட்டு, “அந்த ஷாலை கொடுங்க’’என தன் உதவியாளரிடம் சால்வையை வாங்கி ரஜினிபாலாவுக்கு போர்த்தி தன்னுடைய வெறித்தனமான ரசிகனை கவுரவிக்கிறார் ரஜினி.
சடாரென சேரிலிருந்து எழுந்து ரஜினியின் முன்பு தரையில் உட்கார்ந்து, “அண்ணாமலை’ பாம்பு சீன், துள்ளிக் குதித்து எழுந்து “பாட்ஷா’ ஸ்டைல், விசுக்கென ஆள்காட்டி விரலை ஆட்டி “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்’ என விதம் விதமாக நடித்துக் காட்டுகிறான் ரஜினிபாலா. எல்லாவற்றையும் குழந்தை போல் கைதட்டி ரசித்து, வாய் விட்டுச் சிரித்து மகிழ்கிறார் ரஜினி.
அடுத்து கிஃப்ட் பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ், கையடக்க ரஜினி சிலை ரஜினிபாலாவுக்கு ரஜினி கொடுக்க, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நெக்குருகுகிறது குடும்பம். “”அய்யா ஒங்க பேரைச் சொன்னாத்தான்யா மாத்திரை சாப்பிடுறான்”’என ரஜினிபாலாவின் தங்கை கூறியதும், “”கண்ணா மாத்திரயை ஒழுங்கா சாப்பிடணும், அம்மாகிட்ட நான் விசாரிப்பேன்… என்ன சரியா?”’என்றதும் “இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன்’’என மழலை மொழியில் சொல்கிறான்
ரஜினிபாலா. “”பார்த்து பத்திரமா கூப்பிட்டுப் போங்க”’என உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினியின் வார்த்தை கள்.
தலைவர்ரஜினியை மட்டுமே நினைவில் கொண்டுவாழும் வியாசர்பாடி ரஜினிபாலா விரைவில் பூரணகுணம்அடைய கோடிக்கணக்கானரசிகள் பிராத்திப்போம்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: